tamilnadu

img

உ.பியில் ஊட்டச்சத்து குறைபாடு இறப்புகள் குறித்து யோகி அரசுக்கு என்.எச்.ஆர்.சி நோட்டீஸ்

உத்தரப்பிரதேசத்தில், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் இறப்புகள் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்.எச்.ஆர்.சி) யோகி ஆதித்யநாத் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பஸ்திக்கு அருகே உள்ள ஓஜகஞ்ச் கிராமத்தின் கப்தங்கஞ்ச் தொகுதியைச் சேர்ந்தவர் ஹரிஷ் சந்திரா என்பவரின் குடும்பத்தினர் நான்கு பேரும், கடந்த 6 ஆண்டுகளில் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இவர்கள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில்,  இதனை அறிந்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து, இந்த சம்பவங்கள் குறித்து தேசிய யோகி ஆதித்யநாத் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், நான்கு வாரங்களில் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரப் பிரதேசத்தின் தலைமை செயலாளரை கேட்டுக் கொண்டுள்ளது.

;